திருமணத்துக்கு மறுத்த கள்ளக்காதலியை அவரது கள்ளக்காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது.
மும்பை கோவண்டி பைங்கன்வாடி, பாரத்நகர் குடிசைப்பகுதியை சேர்ந்தவர் சபிக் ஜாபர்சேக் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நூர்பானு (28) என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நூர்பானுக்கும் திருமணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நூர்பானு தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சபிக் ஜாபர்சேக்கிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து நூர்பானுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள சபிக் ஜாபர்சேக் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அவரது கணவரை விவாகரத்து செய்யுமாறு நூர்பானுவிடம் சபிக் ஜாபர்சேக் தெரிவித்துள்ளார்.
ஆனால் நூர்பானு அவரது கணவரை விவாகரத்து செய்யாமல் மறுத்து வந்துள்ளார். இது சபிக்ஜாபர்சேக்குக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நூர்பானுவை சந்திக்க வருமாறு சபிக் அழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இருவரும் அங்குள்ள மைதானத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சபிக் ஜாபர்சேக் மீண்டும் தெரிவித்துள்ளார். ஆனால் நூர்பானு இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வரமுடியாது என்றும் கூறியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த சபிக் ஜாபர்சேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நூர்பானுவை சரமாரியாக குத்தி விட்டு ஓடிச் சென்றுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்த நூர்பானுவை கோவண்டி பொலிஸார் மீட்டு சயான் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி நூர்பானி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சபிக் ஜாபர்சேக்கை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் குர்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளா
